தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் புரெவி புயல் எதிரொலியாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அணைகள் மற்றும் குளங்களின் கரை உறுதித்தன்மையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால அருவி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: