வால்பாறை: வால்பாறையை அருகே எஸ்டேட்டில் புகுந்த யானைகள் மாரியம்மன், விநாயகர் கோயிலில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்தையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கோயிலை மூடிவிட்ட வீடு திரும்பினர்.