பராகுவே: செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, தனது புதிய பயிற்சியாளராக சாச்சா பஜினை தேர்வு செய்துள்ளார்.
டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 5,205 புள்ளிகளுடன், கரோலினா பிளிஸ்கோவா 6ம் இடத்தில் உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் யு.எஸ.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பைனலுக்கு, இவர் முன்னேறினார். ஆனால் அப்போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரிடம் தோல்வியடைந்தார். அதற்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிளிஸ்கோவா, குறிப்பிடத்தக்க வகையில் சாதிக்கவில்லை. இந்த ஆண்டு நடந்த 3 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் அவர் காலிறுதிக்கு கூட முன்னேறவில்லை.