சென்னை: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். மழை நீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்கிறார். செம்மஞ்சேரியில் சில பகுதிகளில் மழை நீர் வடிய வில்லை என செய்தி வெளியான நிலையில் இதன் எதிரொலியாக முதல்வரின் ஆய்வு நடக்கிறது. நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதையடுத்து புயல் கரையை கடந்த உடன் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்தது. பல இடங்களில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதன்பின் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.