கலசபாக்கம்: நிவர் புயல் மழை காரணமாக, கலசபாக்கம் தொகுதியில் 36 சிறப்பு முகாம்களில் 510 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், வேட்டி- சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முகாம்களில் தங்கியுள்ள 510 குடும்பங்களுக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நிவாரண பொருட்களை வழங்கினார். இதையொட்டி, கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு முன்னிலை வகித்தனர்.