குன்னூர்: நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் மலை ரயில் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.இதனால் கடந்த, 8 மாதங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி நீலகிரி மலை ரயில் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில் ‘அவுட் ஆப் லவ் சீசன் 2ம் பாகம்’ என்கிற இந்தி வெப் தொடருக்கான படப்பிடிப்பு நேற்று கேத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.