செவ்வந்திபாளையத்தில் வாய்க்காலில் படர்ந்த செடி கொடிகளால் நீரோட்டம் தடை

கரூர்: கரூர் அடுத்த செவ்வந்திபாளையம் வாய்க்காலில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் அடுத்த செவ்வந்திபாளையத்தில் விவசாய நிலங்களின் அருகே பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலில் அதிகளவு ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகொடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. இதன் காரணமாக வாய்க்காலின் போக்கும் தடைபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இதனை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, வாய்க்காலின் வேகத்தை கட்டுப்படுத்தி வரும் இந்த செடிகொடிகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: