கரூர்: கரூர் ஈஸ்வரன் கோயில் அருகே குறுகிய சாலையில் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். கரூர் ஈஸ்வரன் கோயில் அருகே வடக்கு மடவளாக தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இந்நிலையில் இந்த சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இதனால் சாதாரண நிலையில் நான்கைந்து வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலையில், தற்போது தடுப்புச் சுவர் சாலையின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என இந்த பகுதியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.