பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், விலை மீண்டும் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில், ஜூலை மாதத்திலிருந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் தக்காளி சாகுபடி செய்வதை தொடர்ந்தனர். இதில் பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி நல்ல விளைச்சலடைந்துள்ளதால் அதன் அறுவடை பணி கடந்த சில வாரத்திற்கு முன்பிருந்து துவங்கியது. இதனால், மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமானது. தற்போது, பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தக்காளியின் அறுவடை தீவிரமாக உள்ளது.