சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பின் போது ஆயுதப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் சக போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஆவடி ஜே.பி.நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (58). இவர், சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு முன்பு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை நடந்தது. அப்போது அந்ேதாணிசாமி திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக ஆயுதப்படை காவலர்கள் அந்தோணிசாமியை மீட்டு காவலர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.