ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கெருகம்பாக்கம் கிராமத்தில் என்விரான் பயோ வேஸ்ட் பிரைவேட் சார்பில், மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனம் தொடங்க உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.இதில் பொதுமக்கள் கூறும்போது, ‘இப்பகுதியில் அமையவிருக்கும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் தொழிற்சாலையால் ஏற்படும் நச்சுக்கழிவுகளால் மக்களுக்கு ஆபத்து உள்ளது. மேலும், இந்த தொழிற்சாலைக்கு 100 பேரை வேலைக்கு தேர்வு செய்வதாக கூறியுள்ளனர்.