கோயிலுக்குள் திருக்கல்யாணம்: திருச்செந்தூர் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை கடற்கரையிலும், திருக்கல்யாணத்தை மண்டபத்திலும் நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று வழக்கம்போல இன்று மாலை சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடத்தப்படும். கோயிலின் உள்பகுதியிலுள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு திருக்கல்யாணமும் நடைபெறும்’’ என்றார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைவரும் பார்க்கும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யலாம் எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: