சேலம்: அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொேரானா தொற்று குறைந்துள்ளது என்று சேலத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் வனவாசியில் நேற்று நடந்த அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தவிர்க்க முடியாத சூழலில் நீட் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த காலகட்டத்தில் ஏழை, எளிய மாணவர்களின் நிலையை நான் சிந்தித்தேன். ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத சூழல் உருவாகும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று எண்ணிப்பார்த்து, எனது உள்ளத்தில் உதித்தது தான், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு திட்டம்.