திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர், டி.ஜெ.கோவிந்தராசன், எம்.பூபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதற்காக இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லி சடையப்பா திருமண மண்டபத்தில் நடைபெறும் கருத்து கேட்கும் நிகழ்ச்சிக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை தர உள்ளனர்.