சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆழ்கடல் பகுதியில் அனுமதி வழங்கியது குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏதும் கூறாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த திமுக நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் டி.சத்தியேந்திரன் உருவப்பட திறப்புவிழா நேற்று நடைபெற்றது. திருவுருவப் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். இதைத்தொடந்து அவர் ஆற்றிய உரை:டி.சத்தியேந்திரனின் படத்தை கனத்த இதயத்துடன் திறந்து வைக்கிறேன். நம்மையெல்லாம் விட்டு இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அதை நினைத்துப் பார்க்கவே என் மனம் மறுக்கிறது. அரசியலில் நேர்மை எடப்பாடி பழனிசாமி அகராதியில் இல்லை. பொது வாழ்வில் தூய்மை அதிமுக அமைச்சர்களிடம் அறவே இல்லை. வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துங்கள். அதிமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட இதுதான் நம் கையில் கிடைத்துள்ள ஆயுதம்.