ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல்கள் பக்தர்கள் ரூ.11.61 லட்சத்தை காணிக்ைகயாக செலுத்தி உள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்றும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், இந்த மாதத்திற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.