ஆண்டிபட்டி: தேசியக்கொடியை பார்த்து நாட்டின் பெயரை சொல்லி அசத்தும் ஆண்டிபட்டி சிறுவன் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை சேர்ந்த தம்பதி ஜீவன் மாணிக்கம் - திவ்யா. இவர்களின் ஒரே மகன் ரினேஷ் ஆதித்யா. இரண்டரை வயதாகும் ரினேஷ் ஆதித்யாவுக்கு அபார ஞாபகசக்தி திறன் உண்டு. சிறுவனுக்கு தேசியக்கொடிகள் மூலம் நாடுகளின் பெயரை கூறுதல், இந்தியாவின் தற்போதைய மத்திய அமைச்சர்களின் பெயர்கள், உலக நாடுகளில் பிரசித்தி பெற்ற விமானங்களின் பெயர்கள், பல நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்களின் பெயர்கள், பிரசித்தி பெற்ற பிரபல கம்பெனிகளின் லோகோ மூலம் பெயர் கூறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றோர் அளித்தனர்.