பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு டிரைலர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் மின்னணு சாதனங்கள், உணவு, மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் டிரைலர் லாரி மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் டிரைலர் லாரி உரிமையாளர்கள் அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுகத்தில் இருந்து சரக்கு பெட்டகங்களுக்கு அனுப்பப்படும் லாரிகளில் அதிகபாரம் ஏற்றிவைப்பதாக டிரைலர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.