மதுரை: மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவது அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை ெசய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் சரண் ரங்கராஜன், ‘‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டசபை கூட்டப்படாததால், உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. சட்ட வரைவு தயாரிப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும்’’ என்றார்.