சத்தியமங்கலம்: பண்ணாரி அருகே சரக்கு லாரியை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அவ்வப்போது காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது வழக்கம். நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி திம்பம் மலை அடிவாரத்தில் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்தது.