புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் சிறப்பு குழு முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திக்கு, கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை நிர்வகிக்க உதவும் வகையில் சிறப்பு குழு கடந்த ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. இக்குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியது.