நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்ட குழுமக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக அமைக்கப்படும் பாடத்திட்ட குழுமத்திற்கு பேராசிரியர் பிரபாகரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு கூடுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்ட குழுமக் கூட்டம் முதன்முறையாக இன்று ஆன்லைன் மூலம் கூடப்பட்டுள்ளது. அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் என்ற புத்தகத்தை பல்கலைக்கழக பாடப்பகுதியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பும் பேராசிரியர் பிரபாகரன் தலைமையில் உள்ள 15 பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவில் பேராசிரியர்கள், வெளி மாநிலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் என பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.