பழனி : பழனியில் சர்வ சாதாரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலப் பிரச்சனை காரணமாக தொழிலதிபர் நடராஜன் என்பவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுப்ரமணி மற்றும் பழனிச்சாமி ஆகியோரை நேற்று சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவ சிகிச்சையில் இருந்து சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததையடுத்து பழனி நகர போலீசார் நடராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தியேட்டர் உரிமையாளர் நடராஜன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.