திருமலை: திருச்சானூர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று இரவு பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. சின்ன சேஷம், பெரிய சேஷம், அன்னம், முத்து பல்லக்கு, சிங்கம், கற்பக விருட்சம், ஹனுமந்த வாகனம், பல்லக்கு உற்சவம், யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை சர்வ பூபால வாகனம் மற்றும் இரவு தங்க கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார்.