கமுதி: கமுதி பகுதியில் பனை ஓலை தொழில் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆதிதிராவிடர் தெருவில் பனை ஓலை தொழில் செய்யும் 100 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பனைஓலை, மட்டையில் பெட்டி, கொட்டான், சோளகு போன்ற பொருட்களை தயார் செய்து வருகின்றனர். பனை ஓலை மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதால், இந்த தொழிலும் நலிவடைந்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து பனை ஓலை தொழிலாளி தனுஷ்கோடி கூறுகையில், ‘கமுதி பகுதியில் பனை மரங்கள் அளிக்கப்பட்டதால், பொருள்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களான ஓலை, மட்டை போன்றவற்றை 40 கி.மீ. தூரத்தில் உள்ள சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வாங்கி வர வேண்டியுள்ளது.