எம்.ஜி.ஆர்., நகரில் அதிகாலை பயங்கரம் டிவி நடிகர் ஓடஓட வெட்டி படுகொலை

* கள்ளக்காதல் விவகாரமா என போலீஸ் விசாரணை

* சிசிடிவி கேமராவை உடைத்த கொலையாளிகள்

சென்னை: இலங்கை அகதியான டிவி நடிகர் ஒருவரை ரவுடி கும்பல் ஒன்று ஓட ஓட அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆர். நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர். நகர் வள்ளல் பாரி தெருவை சேர்ந்தவர் செல்வரத்தினம்(41). இலங்கையை சேர்ந்த இவர் சிறு வயதிலேயே அகதியாக தனது பெற்றோருடன் தமிழகம் வந்துவிட்டார். பிறகு விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை டேம் காலனி அகதிகள் முகாமில் வசித்தார். செல்வரத்தினத்துக்கு திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளனர். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சென்னையில் உள்ள நண்பர்கள் உதவியுடன் தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்தார். தொலைக்காட்சி நடிகர்களில் இவர் முன்னணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் விருதுநகரில் உள்ளனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக வாடகை வீட்டில் தங்கியபடியே நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6.45 மணிக்கு நடிகர் செல்வரத்தினம் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொள்ள வெளியே வந்துள்ளார். அப்போது ஏற்கனவே அவரது வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்த 4 பேர் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் நடிகர் செல்வரத்தினத்தை பார்த்த உடன் ஓடிவந்தனர். இதை பார்த்த செல்வரத்தினம் சுதாரித்து கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். ஆனால் 4 பேர் கொண்ட கும்பல் விடாமல் துரத்தி சென்று பொதுமக்கள் முன்னிலையில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் நடிகர் அலறி துடித்தார். பொதுமக்களை பார்த்து காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டுள்ளார்.

 ஆனால் பொதுமக்கள் யாரும் அருகில் வராதபடி அரிவாளை காட்டி ரவுடிகும்பல் மிரட்டியது. பின்னர் சாவகாசமாக நடிகரை வெட்டி படுகொலை செய்தனர்.நடிகர் செல்வரத்தினம் இறந்ததை உறுதி செய்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒன்றை உடைத்துவிட்டு அவர்கள் வந்த ஆட்டோவில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலையால் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் படி எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த நடிகர் செல்வரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், படுகொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆட்டோவில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நடிகர் என்பதால் செல்வரத்தினத்திற்கு அதிகளவில் பெண் நண்பர்கள் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

கொரோனா காலமான கடந்த 7 மாதங்களாக வீட்டின் உரிமையாளருக்கு வாடகை கூட கொடுக்காமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்கள் பழக்கம் அதிகமாக இருந்ததால் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், செல்வரத்தினத்தின் செல்போனை கைப்பற்றி கடந்த ஒரு வாரத்தில் வந்த அழைப்பு விபரங்களை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த படுகொலையால் சிறிது நேரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் செல்வரத்தினம் இறந்ததை உறுதி செய்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒன்றை உடைத்துவிட்டு அவர்கள் வந்த ஆட்டோவில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

Related Stories: