திருவில்லிபுத்தூர்: தீபாவளி திருநாளை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது கவுசிக, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தீபாவளி ஆகிய தினங்களில் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, ஆகியோர் ஒன்றாக காட்சி அளிப்பது வழக்கம். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் இந்த தெய்வங்கள் ஒன்றாக காட்சியளித்தன.