ஜெயங்கொண்டத்தில் சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்துக்கு உதவி

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோளின்படி ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கி இருக்கும் சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பங்களுக்கு ஜீவகாருண்ய நண்பர்கள் குழு சார்பில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் மூலமாக சர்க்கஸ் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், இனிப்பு, மாஸ்க் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள் வசந்த் மற்றும் முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.மேலும், ஆதரவின்றி உள்ள ஏழை மக்களுக்கு வேஷ்டி, துண்டு, இனிப்பும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கும் இனிப்பு மற்றும் சேலை வழங்கப்பட்டது.

Related Stories: