கடலூர்: கடலூரில் தீபாவளி சிட்டு நடத்தி 52 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் வண்டிப்பாளையத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வரும் விஜயராகவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இணைந்து தீபாவளி சிட்டு நடத்தினர். மாதத்தவனையாக மூன்று விதமான சிட்டுக்களுக்கு பணம் செலுத்தினால் சீட்டிற்கு தகுந்தாற் போல் தங்க காசு மற்றும் 19 வகையான மளிகை பொருட்களை வழங்குவதாக அவர்கள் கூறியிருந்தனர்.