தீபாவளி சிட்டு நடத்தி 52 லட்ச ரூபாய் மோசடி: தனியார் பள்ளி நிர்வாகி கைது

கடலூர்: கடலூரில் தீபாவளி சிட்டு நடத்தி 52 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் வண்டிப்பாளையத்தில் தனியார் நர்சரி பள்ளி நடத்தி வரும் விஜயராகவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இணைந்து தீபாவளி சிட்டு நடத்தினர். மாதத்தவனையாக மூன்று விதமான சிட்டுக்களுக்கு பணம் செலுத்தினால் சீட்டிற்கு தகுந்தாற் போல் தங்க காசு மற்றும் 19 வகையான மளிகை பொருட்களை வழங்குவதாக அவர்கள் கூறியிருந்தனர்.

இதனை நம்பி கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 478 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு விஜயராகவன் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தானர். இதை அடுத்து தனியார் பள்ளி நிர்வாகி விஜயராகவனை கைது செய்த போலீசார் தலைமறைவான அவரது சகோதரி சங்கரியை தேடிவருகின்றனர்.

Related Stories: