போடி: போடி அருகே, மீனாட்சிபுரத்தில் 150 ஏக்கரில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மழை காலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலை சாம்பலாறு தடுப்பணை தாண்டி வரும் காட்டாற்று வெள்ளம் கொட்டகுடி ஆற்றில் பாய்ந்து பின்னர் வைகை அணையில் கலக்கிறது. இதனால், கொட்டகுடி ஆற்று தண்ணீரை இந்த கண்மாயில் தேக்குவர். கடந்த மாதங்களில் மழை பெய்தபோது மீனாட்சியம்மன் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், கண்மாய் வறண்டு கிடந்தது.இந்நிலையில், மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய் நீரை நம்பி முந்தல் துவங்கி கூழையனூர் வரை 1500 ஏக்கரில் ஒருபோக நெல் சாகுபடி செய்துள்ளனர்.