சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சென்னையை சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வடமாநில இளைஞர்களை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஐபிஎல் சூதாட்டமும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையிலும் சமீபத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பிரத்யேக செயலியை உருவாக்கி, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சவுகார்பேட்டை பகுதியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.