டெல்லியில் கட்டப்பட்டுள்ள தமிழ் பள்ளிக்கட்டிடத்தை வரும் 12ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.!!!

சென்னை: தலைநகர் டெல்லியில் மயூர் விஹார் பகுதில் கட்டப்பட்டுள்ள அம்மா பிளாக் கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கவுள்ளார். டெல்லி தமிழ் கல்விக்கழகம் சார்பில் 7பள்ளிகள் செயல்பட்டுவரும் நிலையில் 8ஆவதாக ஒரு பள்ளிக்கு கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதில் முதல்வர் அடிக்கல் நாட்டிய அம்மா பிளக்க கட்டிடத்தின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை வரும் 12-ம் தேதி

(வியாழக்கிழமை) சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கவுள்ளார்.

வகுப்பறை, ஆய்வுக்கூடம்,நூலகம்,உள்ளிட்ட  37 அறைகளை கொண்ட இப்பள்ளிக்கு தமிழகஅரசு சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் மூலம் டெல்லியில் உள்ள  ஏழை எளிய தமிழ் மாணவர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: