திருவள்ளூர்: செங்குன்றம் காந்திநகரில் 110க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை மற்றும் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் வழங்ககோரி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்டோர் பாய், படுக்கைகளுடன் வீட்டு சாமான்களுடன் திருநங்கை இன்பா தலைமையில் சாலையில் படுத்து நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு வீட்டுமனை வழங்ககோரி முழக்கங்கள் எழுப்பினர்.