கடையநல்லூர்: கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு ‘இணையதள அறிவு’ இருந்தால் வெப்சைட்டில் பதிலை தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கை ஊராட்சி கள்ளம்புளியை சேர்ந்த சந்திரன் (46) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், 2013 முதல் 2020 வரை சரி செய்யப்பட்ட கை பம்புகளின் எண்ணிக்கை மற்றும் செலவு, எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் நிதி எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட 18 கேள்விகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடம் கேட்டுள்ளார். இதற்கு கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில் கேள்வி எண் 1 முதல் 17 வரை உள்ள கேள்விகளுக்கு www.accounting online.gov.in என்ற இணையதள முகவரியில் பதில் உள்ளது.