திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே இடிந்து சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது பாலாஜி நகர். இங்கிருந்து திருநகர் செல்லும் வழியில் நிலையூர் கிளை கால்வாயின் குறுக்கே இரண்டு இடங்களில தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பாலம் இரண்டு சக்கர வாகனஙகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிகளவில் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.