திருப்பரங்குன்றம் அருகே தரைப்பாலம் இடிந்து சேதம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே இடிந்து சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது பாலாஜி நகர். இங்கிருந்து திருநகர் செல்லும் வழியில் நிலையூர் கிளை கால்வாயின் குறுக்கே இரண்டு இடங்களில தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பாலம் இரண்டு சக்கர வாகனஙகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிகளவில் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் திருநகரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள் ஆகியவற்றிற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே உடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: