சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிளை வாய்க்கால் தடுப்பு சுவர்கள் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில நீண்ட நாட்களாக இடிந்தும், சேதமடைந்தும் வருகிறது. மேலும் தடுப்பு கட்டைகள் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது விகேடி சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் சேதமான கிளை வாய்க்கால் தடுப்பு சுவர்களை நகாய் திட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளதாக அப்பகுதி வாசிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.