நெய்வேலி சிறை கைதி மரணம் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு

சென்னை: நெய்வேலி கைதியின் மரணம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன், கடந்த அக்டோபர் 28ம் தேதி மாயமானார். வழக்கு தொடர்பாக விருதாச்சலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் உயிரிழந்தார். சிறையில் சித்ரவதை செய்யப்பட்டதாலேயே உயிரிழந்தார் என்று சர்ச்சைகள் உருவானதால், விசாரணையை சிபிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை இயக்குனர் திரிபாதி நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: