விஜய் அரசியலுக்கு வருவாரா? தாய் ஷோபா பேட்டி

சென்னை: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியல் கட்சியாக பதிவு செய்தார். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என விஜய் உடனே அறிக்கை வெளியிட்டார்.   எஸ்.ஏ.சந்திரசேகரன் பதிவு செய்துள்ள கட்சியின் பொருளாளராக விஜய்யின் தாயாரும், பின்னணி பாடகியுமான ஷோபாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து நேற்று ஷோபா அளித்த பேட்டி: விஜய் பெயரில் அசோசியேஷன் ஆரம்பிக்கிறோம் என்று கையெழுத்து கேட்டார்கள். நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்து போட்டேன். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கையெழுத்து கேட்டார்கள். அது கட்சி தொடங்குவதற்கானது என்று புரிந்துகொண்டேன்.

இதை நீங்கள் விஜய்க்கு தெரியாமல் செய்வதால், நான் ைகயெழுத்து போட மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். முதலில் போட்ட ைகயெழுத்தை கூட வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பொருளாளராக நான் வேறு யாரையாவது போட்டுக்கொள்கிறேன் என்று எஸ்.ஏ.சி சொல்லிவிட்டார். நானும் விலகி விட்டேன். இதுபோன்று மீடியாவில் பேச வேண்டாம் என்று எஸ்.ஏ.சியிடம் விஜய் பலமுறை சொல்லி

விட்டார் என்றாலும், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். அதனால்தான் விஜய் அவரிடம் பேசுவதில்லை. விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு ஷோபா கூறினார்.

Related Stories: