வாஷிங்டன்: ஜார்ஜியா மாகாண வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் - பைடன் சமஅளவில் இருந்த நிலையில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு 264 வாக்கு கிடைத்த நிலையில் தற்போது 280 ஆக உயர வாய்ப்புள்ளது. ஜார்ஜியாவில் டிரம்ப்பை ஜோ பைடன் முந்தியுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் 16 வாக்குகளும் ஜோ பைடனுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3 நாட்களாக இழுபறியில் உள்ள நிலையில், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்’ என்று டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு இருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மாகாண விதிகளை பின்பற்றக்கோரி டிரம்ப் தரப்பில் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.