ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். சில படகுகளில் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். வேறு பகுதிக்கு சென்றவர்களையும் மீன் பிடிக்க விடாமல் துரத்தி விரட்டியடித்தனர். வேறு வழியின்றி இரவிலேயே மீனவர்கள் கரை திரும்பினர்.