ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - ஜெயலட்சுமி. இவர்களது 3வது மகன் அசோக் (எ) சொக்கநாதர் (39). இவர் 13 வயதில் காணாமல் போய், 26 வருடங்கள் கழித்து கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு திரும்பினார். காசிக்கு சென்று, அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர், தோட்டத்தில் 12 அடி ஆழ குழி தோண்டி, சிமென்ட் ஸ்லாப் கற்கள் பதித்து உள்ளே இறங்கி ஜீவ சமாதி அடையப்போவதாக கூறி அகோரி கோலத்தில் அமர்ந்தார். அருகில் சிவன் படம், ருத்ராட்ச மாலை, பூக்கள் கிடந்தன. தகவலறிந்து வந்த ராஜதானி போலீசார் அவரை ேமலே வருமாறு கூறினர்.