புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மே முதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் உள்ள பதற்றத்தை தணிக்க பல நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த மாதத்தில் (நவம்பர்) பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நான்கு முறை வெவ்வேறு கூட்டங்களில் சந்திக்கின்றனர். வெளியுறவு வட்டார தகவல்களின்படி, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் வெவ்வேறு உச்சிமாநாடுகளில் மூன்று முறை காணொலி காட்சி மூலம் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.