பந்தலூர்: பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி யானை பலியானது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு ஆணையப்பன்சோலை வனப்பகுதியையொட்டி தனியார் தோட்ட மேலாளர் நேற்று ரோந்து சென்றபோது காட்டு யானை மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கூடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஸ்சோமன், உதவி வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.