சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 வயதுக்கு மேற்பட்ட 15 பேர் பூரண குணமடைந்துள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தற்போது 23 ஆயிரத்து 37 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 21 ஆயிரத்து 329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 95 வயதுக்கு மேற்பட்ட 15 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 90 வயதுக்கு மேற்பட்ட 31 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 27 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.