கரூர்: பிளக்ஸ் பேனர் அகற்றியதில் ஏற்பட்ட மோதலில் அதிமுகவினர் தாக்கியதில் திமுக தொண்டர் பலியானார். கரூர் மாவடியான் கோயில் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு கட்டப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படும் போது, திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அதே பகுதி திமுகவை சேர்ந்த பிரபாகரன்(55), இவரது மகன் விக்னேஷ்(28) ஆகிய இருவரும் காயமடைந்தனர். வீட்டுக்கு சென்ற பிரபாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிரபாகரனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.