தரங்கம்பாடி பகுதியில் தண்ணீர் இன்றி காயும் சம்பா பயிர்: விவசாயிகள் கவலை

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பகுதியில் உள்ள மகிமலையாற்றில் தண்ணீர் வராததால் சம்பா பயிர்கள் காய்ந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தில்லையாடி, திருவிடைகழி, காழியபப்பநல்லூர் உள்ளிட்ட பகுதியில் மகிமலையாற்று தண்ணீர் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்த ஆற்று தண்ணீரை நம்பி பம்பு செட் இல்லாத சிறு விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 100 ஏக்கரில் தற்போது விதை விட்ட நிலையிலும், நடவு நட்ட நிலையிலும் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் மகிமலையாற்றில் தண்ணீர் விடுவதை பொதுப்பணித்துறை நிறுத்தி விட்டதால் விவசாயிகள் நாற்றாங்காலுக்கும், நடவு செய்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர். தண்ணீர் இல்லாததால் பயிர் காய்ந்து வருவதை பார்த்து கவலை அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை உடனடியாக மகிமலையாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: