சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு தமிழக கடற்கரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது என்றும் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.