டெல்லி: மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் ஸ்மிருதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடிதான் உள்ளது. குறைவது போல தோன்றினாலும் கூட அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.