லக்னோ: சட்டப்பிரிவு 370 நீக்கம், ராமர் கோயில் கட்டியது போன்றவற்றை போல சீனாவுக்கு எதிராக போர் புரிவதற்கான தேதியையும் பிரதமர் மோடி தீர்மானித்துவிட்டதாக உபி பாஜ தலைவர் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ள சிக்கந்தர்பூர் தொகுதி பாலியா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜ மாநில தலைவர் ஸ்வதந்தர தேவ் பங்கேற்றார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘என்ன நடக்க வேண்டும், ஏது நடக்க வேண்டும் என்ற அனைத்திற்கும் பிரதமர் மோடி தேதியை தீர்மானித்து விட்டார்.