மேல்மலையனூ: செஞ்சி பொன்பத்தி ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்து சரணாலயம் போன்று காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எல்லைக்குட்பட்ட பொன்பத்தி ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது செஞ்சி முதல் பொன்பத்தி வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். கடந்த காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக இந்த ஏரிக்கு அதிகளவு நீர் வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் தற்போது ஏரியில் அதிகளவு நீர் தேங்கியுள்ளது. ஏரியின் நடுவே உள்ள கருவேல மரங்கள் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.